Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சுரண்டை: சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்திய பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா விழிப்புணர்வு முகாம் கனிவேலன் அரங்கத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சின்னதாய் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர். பிரான்சிஸ் ஆபிரகாம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் ரஷீத் கலந்துகொண்டு இத்திட்டத்தின் பயன்பாடு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து துணை மேலாளர் ஷீலா இத்திட்டத்தில் இணைவது தொடர்பான ஆவணங்களை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்று இதன் பயன்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து வங்கியின் வியாபார தொடர்பு அதிகாரி மா.ஜெயக்குமார் மாணவர்களிடையே திட்டத்தில் இணைவது குறித்து விளக்கினார்.
முடிவில் கௌரவ விரிவுரையாளர் ஜெனித் லெனிதா அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு திட்டத்தில் இணைந்தனர். நிகழ்ச்சியை வணிக நிர்வாகவியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் க. சித்திரைக்கனி தொகுத்து வழங்கினார்.